HomeCity Newsகிண்ணியாவில் ஆயுதத் தேடல்!

கிண்ணியாவில் ஆயுதத் தேடல்!

Date:

Related stories

பிரான்சில் அவசர கால அழைப்பு எண்கள், இலவசச் சட்ட ஆலோசனை மையங்கள் (Point Justice)

பிரான்சில் வாழும் போது எதிர்பாராத மருத்துவ அவசர நிலைகள், பாதுகாப்பு அச்சுறுத்தல்கள்...

பிரான்சில் வாழும் முதியவர்கள், நோயாளிகளுக்கு அரச உதவிகள், பராமரிப்புச் சேவைகள் 

பிரான்சில் வாழும் முதியவர்கள் மற்றும் பராமரிப்புத் தேவைப்படும் நோயாளிகளின் சுதந்திரமான வாழ்வை...

பிரெஞ்சு குடியுரிமை நேர்காணல்: முக்கிய கேள்விகள், பிரான்ஸ் வரலாறு / கலாச்சாரத் தயாரிப்புகள்

பிரான்சில் சட்டபூர்வமாகத் தங்கியிருந்து பிரெஞ்சு குடியுரிமைக்கு (Naturalisation) விண்ணப்பிப்பவர்களுக்கு இறுதி மற்றும்...

பிரான்சில் வீடு வாடகைக்கு எடுப்பதற்கான Dossier தயாரித்தல்: Garant இல்லாதவர்களுக்கு Visale உதவி

பிரான்சில், குறிப்பாக பாரிஸ் போன்ற பெருநகரங்களில், தகுந்த வாடகை வீட்டைக் கண்டுபிடிப்பது...

பிரான்ஸ் வங்கிகள் கணக்கு தொடங்க மறுத்தல்: Banque de France இன் ‘Droit au Compte’ உரிமை 

பிரான்சில் சட்டபூர்வமாக வாழும் ஒவ்வொரு நபருக்கும் அன்றாட நிதிச் செயல்பாடுகளை மேற்கொள்வதற்கு...
spot_imgspot_img

கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உப்பாறு பகுதியில் ஆயுதங்கள் புதைக்கப்பட்டுள்ளதாகக் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நில அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நடவடிக்கை இன்று (4) காலை 8.30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டது. திருகோணமலை குற்ற விசாரணை புலனாய்வு பணியகப் பிரிவு மற்றும் கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவு இணைந்து இதனை முன்னெடுத்தன.

நீதிமன்ற அனுமதியுடன் நில அகழ்வு
நேற்று (3), திருகோணமலை குற்ற விசாரணை புலனாய்வு பிரிவு, கிண்ணியா பொலிசின் ஊடாக நீதவான் நீதிமன்றத்தில் AR 155/2025 வழக்கின் அடிப்படையில் கோரிக்கை சமர்ப்பித்தது. இதனை தொடர்ந்து நீதவான் கே. ஜீவராணி, நிலத்தை தோண்டும் அனுமதியை வழங்கினார்.

1990-ஆம் ஆண்டின் பின்னணி
கண்டுபிடிக்கப்பட்ட பகுதி, 1990-ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்ததாக கருதப்படுகிறது.

அந்த காலகட்டத்தில், இது பொதுமக்கள் வசிக்கும் இடமாக காணப்பட்டது.
1990-ஆம் ஆண்டின் இறுதியில், யுத்த சூழ்நிலை தீவிரமடைந்ததால், மக்கள் அந்தப் பகுதியை விட்டே வெளியேறினர்.
பின்னர் 2011-ஆம் ஆண்டில், மக்கள் மீண்டும் குடியேறி இன்றும் அந்த இடத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

பலத்த பாதுகாப்பு ஏற்பாடு
கொழும்பு குற்ற புலனாய்வு பணியக அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று (3) அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். இதனைத் தொடர்ந்து, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

நில அகழ்வு இன்று (4) காலை 8.30 மணிக்கு தொடங்கி, பகல் 1.45 மணிவரை சுமார் 5 மணி நேரம் நீடித்தது. ஆயினும், எந்தவிதமான ஆயுதங்களும் மீட்கப்படவில்லை. எனவே, தோண்டப்பட்ட இடம் மீண்டும் மண் போட்டு மூடப்பட்டது.

நடவடிக்கையில் பங்களித்தவர்கள்
இந்த நடவடிக்கையின் போது முக்கிய பொலிஸ் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்:

கிண்ணியா பொலிஸ் பொறுப்பதிகாரி – கிலய்மன் பெனான்டோ
திருகோணமலை மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி – எம். எஸ். நஜீம்
கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவு (CID) அதிகாரி – சந்தன
திருகோணமலை மாவட்ட தடையியல் ஆய்வு குழுவின் பொறுப்பதிகாரி – ஏ. சிவதர்சன்
திருகோணமலை மாவட்ட விசேட அதிரடி பிரிவு குழுவின் தலைவர் – உதவி பொலிஸ் பரிசோதகர் பி. சாந்த
கிண்ணியா பிரதேச செயலாளர் – எம். எஸ். எம். கனி
கிராம சேவை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்த அகழ்வுப் பணியின் போது அங்கு சமூகமளித்திருந்தனர்.

முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள்
நில அகழ்வின் போது எந்தவொரு ஆயுதங்களும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடருகின்றன.

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here