HomeCity Newsபிரான்ஸ்: காதலன் செய்த வேலை! படுக்கையிலே உயிர் துறந்த பெண்!

பிரான்ஸ்: காதலன் செய்த வேலை! படுக்கையிலே உயிர் துறந்த பெண்!

Date:

Related stories

பிரான்சில் அவசர கால அழைப்பு எண்கள், இலவசச் சட்ட ஆலோசனை மையங்கள் (Point Justice)

பிரான்சில் வாழும் போது எதிர்பாராத மருத்துவ அவசர நிலைகள், பாதுகாப்பு அச்சுறுத்தல்கள்...

பிரான்சில் வாழும் முதியவர்கள், நோயாளிகளுக்கு அரச உதவிகள், பராமரிப்புச் சேவைகள் 

பிரான்சில் வாழும் முதியவர்கள் மற்றும் பராமரிப்புத் தேவைப்படும் நோயாளிகளின் சுதந்திரமான வாழ்வை...

பிரெஞ்சு குடியுரிமை நேர்காணல்: முக்கிய கேள்விகள், பிரான்ஸ் வரலாறு / கலாச்சாரத் தயாரிப்புகள்

பிரான்சில் சட்டபூர்வமாகத் தங்கியிருந்து பிரெஞ்சு குடியுரிமைக்கு (Naturalisation) விண்ணப்பிப்பவர்களுக்கு இறுதி மற்றும்...

பிரான்சில் வீடு வாடகைக்கு எடுப்பதற்கான Dossier தயாரித்தல்: Garant இல்லாதவர்களுக்கு Visale உதவி

பிரான்சில், குறிப்பாக பாரிஸ் போன்ற பெருநகரங்களில், தகுந்த வாடகை வீட்டைக் கண்டுபிடிப்பது...

பிரான்ஸ் வங்கிகள் கணக்கு தொடங்க மறுத்தல்: Banque de France இன் ‘Droit au Compte’ உரிமை 

பிரான்சில் சட்டபூர்வமாக வாழும் ஒவ்வொரு நபருக்கும் அன்றாட நிதிச் செயல்பாடுகளை மேற்கொள்வதற்கு...
spot_imgspot_img

பிரான்ஸின் Champigny-sur-Marne பகுதியில் மிகக் கொடூரமான கொலைச்சம்பவம் ஒன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இடம்பெற்றுள்ளது. இதில், 42 வயதான பெண் பெரின் (Perrine) தனது வீட்டில், அவர் தினமும் உறங்கும் படுக்கையிலேயே சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இச்சம்பவம், அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொலையுடன் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள பெரினின் கணவராகக் கூறப்படும் ஜிம்மி (Jimmy), வயது 38. சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணியளவில், ஜிம்மியின் தந்தை, பெரினை எழுப்புவதற்காக வீட்டிற்குள் சென்றுள்ளார். ஆனால், பெரின் படுக்கையில் சுயநினைவின்றி தூங்குகிறார் என நினைத்த அவர், நெருங்கிச் சென்ற போது பெரின் அசைவின்றி கிடப்பதை பார்த்து கடும் அதிர்ச்சியடைந்தார். உடனே, அவர் மருத்துவ உதவியை நாடி அவசர மருத்துவ குழுவினரை அழைத்துள்ளார். மருத்துவக் குழுவினர் வந்து பரிசோதனை செய்த போது, பெரின் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்பதைக் கண்டறிந்தனர்.

பின்னர், பரிசோதனைக்காக பெரினின் உடல் மருத்துவ நிபுணர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பிரேதப் பரிசோதனையில் பெரினின் தலையில் ஏற்பட்டுள்ள கடுமையான காயமே அவரது மரணத்துக்குக் காரணம் என்று தெரியவந்தது. மேலும், முகப்பகுதியில் பலத்த அடிகளும் இருப்பதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஜிம்மி, பெரினின் மரணத்திற்கு பிறகு தப்பிச் செல்ல முயற்சி செய்ததாகத் தகவல் கிடைத்துள்ளது. ஆனால், Champigny-sur-Marne காவல் துறையினர் அதே தின இரவில், மதுபோதையில் இருந்த ஜிம்மியை கைது செய்தனர். அதன் பின், அவரை குற்றப்புலனாய்வு பிரிவிற்கு ஒப்படைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

விசாரணையின் போது, பெரினின் முகத்தில் காலால் அடித்ததாக ஜிம்மி ஒப்புக்கொண்டுள்ளார். இது, அவரது செயலில் இருந்து கொலையை உறுதி செய்யும் முக்கிய ஆதாரமாக அமைந்துள்ளது.

இந்தச் சம்பவம் தற்காலிக கோபத்தினாலா அல்லது குடும்பத் தகராறினாலா ஏற்பட்டது என்பதைப் பற்றி தற்போது போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கு முன்னர் ஜிம்மிக்கும் பெரினுக்கும் இடையில் ஏற்பட்ட பிணக்குகள், வன்முறை சம்பவங்கள் குறித்து அருகிலுள்ள உறவினர்களிடமும் நண்பர்களிடமும் விசாரிக்கப்படுகின்றது.

இந்த கொடூரமான கொலை சம்பவம் பிரான்ஸ் மக்களிடையே பெரும் கலக்கம் மற்றும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. காதல் என்பது நம்பிக்கையும் பரஸ்பர புரிந்துணர்வையும் அடிப்படையாகக் கொண்ட பந்தமாக இருக்கவேண்டும் என்பதையே மீண்டும் நினைவூட்டும் வகையிலும், பெண் பாதுகாப்பின் மீதான அவசியத்தையும் வலியுறுத்தும் சம்பவமாகவும் இது பார்க்கப்படுகின்றது.

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here