HomeCity Newsபிரான்ஸ்: பலஸ்தீன் தொடர்பில் மக்ரோனின் தீர்மானம்!

பிரான்ஸ்: பலஸ்தீன் தொடர்பில் மக்ரோனின் தீர்மானம்!

Date:

Related stories

பிரான்சில் அவசர கால அழைப்பு எண்கள், இலவசச் சட்ட ஆலோசனை மையங்கள் (Point Justice)

பிரான்சில் வாழும் போது எதிர்பாராத மருத்துவ அவசர நிலைகள், பாதுகாப்பு அச்சுறுத்தல்கள்...

பிரான்சில் வாழும் முதியவர்கள், நோயாளிகளுக்கு அரச உதவிகள், பராமரிப்புச் சேவைகள் 

பிரான்சில் வாழும் முதியவர்கள் மற்றும் பராமரிப்புத் தேவைப்படும் நோயாளிகளின் சுதந்திரமான வாழ்வை...

பிரெஞ்சு குடியுரிமை நேர்காணல்: முக்கிய கேள்விகள், பிரான்ஸ் வரலாறு / கலாச்சாரத் தயாரிப்புகள்

பிரான்சில் சட்டபூர்வமாகத் தங்கியிருந்து பிரெஞ்சு குடியுரிமைக்கு (Naturalisation) விண்ணப்பிப்பவர்களுக்கு இறுதி மற்றும்...

பிரான்சில் வீடு வாடகைக்கு எடுப்பதற்கான Dossier தயாரித்தல்: Garant இல்லாதவர்களுக்கு Visale உதவி

பிரான்சில், குறிப்பாக பாரிஸ் போன்ற பெருநகரங்களில், தகுந்த வாடகை வீட்டைக் கண்டுபிடிப்பது...

பிரான்ஸ் வங்கிகள் கணக்கு தொடங்க மறுத்தல்: Banque de France இன் ‘Droit au Compte’ உரிமை 

பிரான்சில் சட்டபூர்வமாக வாழும் ஒவ்வொரு நபருக்கும் அன்றாட நிதிச் செயல்பாடுகளை மேற்கொள்வதற்கு...
spot_imgspot_img

பலஸ்தீனை ஜூன் மாதத்தில் அங்கீகரிக்கவுள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஏப்ரல் 9-ஆம் தேதி ஒரு பிரஞ்சு தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்தார். இது மேற்கு ஆசியா தொடர்பான பிரான்ஸின் வெளிநாட்டு கொள்கையில் ஒரு முக்கியமான மாற்றத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது.

“சவூதி அரேபியா மற்றும் பல நாடுகளுடன் இணைந்து ஜூன் மாதத்தில் ஒரு மாநாட்டை நடத்தும் நோக்கத்துடன் இருக்கிறோம். இதன் விளைவாக பலஸ்தீனை அங்கீகரிக்க முடியும்,” என மக்ரோன் கூறினார்.

இக்கருத்து, பிரான்ஸின் இரு-மாநில தீர்வு (Two-State Solution) முயற்சிக்கு வலுசேர்க்கும் வகையில் முன்வைக்கப்படுகிறது. இது, இஸ்ரேலுடனும் பலஸ்தீனுடனும் சமாதானமாக இணைந்து வாழும் இரண்டு தனி நாடுகளை உருவாக்கும் தீர்வாகும்.

பலஸ்தீனிய ஆட்சி அமைப்பு (Palestinian Authority) இதை வரவேற்று, “பஸ்தினிய மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் பாதையில் இது முன்னேற்றமான ஒரு கட்டமாகும்” என்று குறிப்பிட்டது.

தற்போது, ஐக்கிய நாடுகள் அமைப்பில் உள்ள 193 நாடுகளில் 147 நாடுகள் பஸ்தீனை அங்கீகரித்துள்ளன. கடந்த 2024 மே மாதத்தில் ஸ்பெயின், ஐர்லாந்து மற்றும் நோர்வே ஆகிய நாடுகளும் இதில் சேர்ந்தன. ஆனால் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற பல மேற்கு நாடுகள் இன்னும் அங்கீகாரம் வழங்கவில்லை.

பிரான்ஸ் எடுத்துள்ள இப்புதிய நடவடிக்கையானது, மற்ற ஐரோப்பிய நாடுகளின் முடிவை மாற்றும் வகையிலும், உலகத் தரத்தில் பலஸ்தீனின் அரசியல் நிலையை உயர்த்தும் வகையிலும் அமையலாம். இதன் போது மக்ரோன் மேலும் ஒரு முக்கிய தகவலை பகிர்ந்தார். பலஸ்தீனை அங்கீகரிப்பதோடு, சில மத்திய கிழக்கு நாடுகள் இஸ்ரேலை அங்கீகரிக்க வாய்ப்பு உள்ளது எனவும் குறிப்பிட்டார்.

தற்போது, எகிப்து, ஜோர்டான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற சில அரபு நாடுகள் இஸ்ரேலை அங்கீகரித்துள்ளன. ஆனால் சவூதி அரேபியா, ஈரான், ஈராக், சிரியா மற்றும் யெமன் போன்றவை இன்னும் அங்கீகரிக்கவில்லை. இதில் சில நாடுகள் இஸ்ரேலை அங்கீகரிப்பது, மத்திய கிழக்கில் புதிய உரையாடல் வாய்ப்புகளை ஏற்படுத்தக்கூடும்.

இது இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனுக்கான சம உரிமைகளை வழங்கும் நோக்கத்திலான ஒரு இரட்டை அங்கீகார முயற்சி எனக் கொள்ளலாம்.

இந்த முயற்சிக்கு எதிராக பல சவால்கள் உள்ளன. நிலப்பகுதிகளைப் பற்றிய தகராறுகள், பாலஸ்தீனியர்களுக்குள் உள்ள உட்பகைகள், மற்றும் இஸ்ரேல் அரசின் கடுமையான நிலைப்பாடு போன்றவை இது சாத்தியமா என்பதில் கேள்விக்குறி எழுப்புகின்றன.

மேலும், பிரான்ஸின் இந்த நடவடிக்கை, இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடன் மோதல்களை ஏற்படுத்தும் வாய்ப்பும் உள்ளது.

பிரான்ஸ் ஒரு அமைதி அமைப்பாளராக இந்த முயற்சியில் ஈடுபடுவதை, பல நாடுகள் மாற்றத்திற்கான ஒரு அறிகுறியாகப் பார்க்கின்றன. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினராகவும், ஐரோப்பிய ஒன்றியத்தில் முக்கிய பங்கு வகிப்பவராகவும், பிரான்ஸின் நடவடிக்கை பலஸ்தினிய அரசியல் நிலைக்கு மேலும் வலுவூட்டும்.

இந்த முயற்சி மூலம், பல ஆண்டுகளாக நிலைத்திருந்த அமைதி முயற்சிகளில் ஏற்பட்ட தளம்பல் நிலையை மாற்றும் புதிய வழி உருவாகலாம்.

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here