HomeCity Newsபிரித்தானியா: புகலிடக் கோரிக்கை நிராகரிப்பு! தீவிரமாகும் சட்டம்!

பிரித்தானியா: புகலிடக் கோரிக்கை நிராகரிப்பு! தீவிரமாகும் சட்டம்!

Date:

Related stories

பிரான்சில் அவசர கால அழைப்பு எண்கள், இலவசச் சட்ட ஆலோசனை மையங்கள் (Point Justice)

பிரான்சில் வாழும் போது எதிர்பாராத மருத்துவ அவசர நிலைகள், பாதுகாப்பு அச்சுறுத்தல்கள்...

பிரான்சில் வாழும் முதியவர்கள், நோயாளிகளுக்கு அரச உதவிகள், பராமரிப்புச் சேவைகள் 

பிரான்சில் வாழும் முதியவர்கள் மற்றும் பராமரிப்புத் தேவைப்படும் நோயாளிகளின் சுதந்திரமான வாழ்வை...

பிரெஞ்சு குடியுரிமை நேர்காணல்: முக்கிய கேள்விகள், பிரான்ஸ் வரலாறு / கலாச்சாரத் தயாரிப்புகள்

பிரான்சில் சட்டபூர்வமாகத் தங்கியிருந்து பிரெஞ்சு குடியுரிமைக்கு (Naturalisation) விண்ணப்பிப்பவர்களுக்கு இறுதி மற்றும்...

பிரான்சில் வீடு வாடகைக்கு எடுப்பதற்கான Dossier தயாரித்தல்: Garant இல்லாதவர்களுக்கு Visale உதவி

பிரான்சில், குறிப்பாக பாரிஸ் போன்ற பெருநகரங்களில், தகுந்த வாடகை வீட்டைக் கண்டுபிடிப்பது...

பிரான்ஸ் வங்கிகள் கணக்கு தொடங்க மறுத்தல்: Banque de France இன் ‘Droit au Compte’ உரிமை 

பிரான்சில் சட்டபூர்வமாக வாழும் ஒவ்வொரு நபருக்கும் அன்றாட நிதிச் செயல்பாடுகளை மேற்கொள்வதற்கு...
spot_imgspot_img

பிரித்தானிய அரசு, வெளிநாட்டுக் குற்றவாளிகளையும், புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களையும் நாடுகடத்துவதை தடுக்கும் சட்டரீதியான தடைகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்டுள்ளது. அதற்காக புதிய சட்டம் உருவாக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியாவில் குற்றவாளிகள் மற்றும் புகலிடத்திற்கான சிக்கல்கள்

பிரித்தானியாவில், குற்றவாளிகள் என வகைப்படுத்தப்பட்ட சிலர், சட்டத்தில் உள்ள சில மீள்பார்வை வழிகளை பயன்படுத்தி, நாடுகடத்தலிலிருந்து தப்பிச் செல்கிறார்கள். குறிப்பாக, மனித உரிமைகள் சட்டத்தின் 8ஆவது பிரிவைப் பயன்படுத்தி, சில வெளிநாட்டினர் நாடுகடத்தப்படுவதிலிருந்து தப்பியுள்ளதாக அரசுத் தரப்பில் இருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதே நேரத்தில், உக்ரைனிய அகதிகள் மற்றும் பாலஸ்தீன அகதிகள் சிலர், விசா விதிகளின் கீழ் பிரித்தானியாவில் தங்க அனுமதி பெற்றுள்ளனர். இது, நாட்டின் அகதி கொள்கையுடன் இணைந்தே மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாக கருதப்படுகிறது.

நாடுகடத்தல் முறைகளை விரைவாக செயல்படுத்த புதிய சட்டம்

நாடுகடத்தலுக்கு எதிரான தடைகளை சரிசெய்து, வெளிநாட்டுக் குற்றவாளிகள் மற்றும் நிராகரிக்கப்பட்ட புகலிடக்கோரிக்கையாளர்களை விரைவாக நாடுகடத்த புதிய சட்டம் கொண்டு வருவதற்கான வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. குறிப்பாக, நீதிமன்றங்கள் மனித உரிமைகள் சட்டத்தின் அடிப்படையில் நாடுகடத்தலுக்கு தடையாக அமையும் நிலையை மாற்ற, புதிய சட்ட விதிகளை பிரித்தானிய அரசு அமல்படுத்த இருக்கிறது.

அரசு தரப்பில் இருந்து வெளியிடப்பட்ட தகவல்களின் படி, இச்சட்டம் அமலுக்கு வந்தால்:
வெளிநாட்டுக் குற்றவாளிகள் மற்றும் புகலிட நிராகரிக்கப்பட்டவர்களின் நாடுகடத்தல் செயற்பாடானது வேகமாக நடக்கும். .

நீதிமன்றங்களின் மனித உரிமைகள் அடிப்படையிலான தடைகளை குறைக்கலாம்.
அகதிகள் தொடர்பான சட்டங்களை மேலும் கட்டுப்படுத்தும் விதமாக புதிய நடைமுறைகள் கொண்டு வரலாம்.

இந்த புதிய சட்டத்தால், ஏற்கனவே பிரித்தானியாவில் வாழும் அகதிகள் மற்றும் சட்டப் பாதுகாப்பு தேடுபவர்கள் எவ்வாறு பாதிக்கப்படுவர் என்பதற்கான விவரங்கள் இன்னும் வெளிவரவில்லை. ஆனால், மனித உரிமை அமைப்புகள் மற்றும் அகதிகள் ஆதரவு குழுக்கள், இந்தச் சட்டம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிராக செல்லக்கூடும் என்பதால் எதிர்ப்பு தெரிவிக்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிரித்தானிய அரசின் இந்த நடவடிக்கைகள் எதிர்விளைவுகளை ஏற்படுத்துமா என்பது காலப்போக்கில் தெரியவரும்.

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here