Homeயாழில் கனடா தமிழர் பலி! புல தமிழர்கள் அவதானம்!

யாழில் கனடா தமிழர் பலி! புல தமிழர்கள் அவதானம்!

Date:

Related stories

பிரான்சில் அவசர கால அழைப்பு எண்கள், இலவசச் சட்ட ஆலோசனை மையங்கள் (Point Justice)

பிரான்சில் வாழும் போது எதிர்பாராத மருத்துவ அவசர நிலைகள், பாதுகாப்பு அச்சுறுத்தல்கள்...

பிரான்சில் வாழும் முதியவர்கள், நோயாளிகளுக்கு அரச உதவிகள், பராமரிப்புச் சேவைகள் 

பிரான்சில் வாழும் முதியவர்கள் மற்றும் பராமரிப்புத் தேவைப்படும் நோயாளிகளின் சுதந்திரமான வாழ்வை...

பிரெஞ்சு குடியுரிமை நேர்காணல்: முக்கிய கேள்விகள், பிரான்ஸ் வரலாறு / கலாச்சாரத் தயாரிப்புகள்

பிரான்சில் சட்டபூர்வமாகத் தங்கியிருந்து பிரெஞ்சு குடியுரிமைக்கு (Naturalisation) விண்ணப்பிப்பவர்களுக்கு இறுதி மற்றும்...

பிரான்சில் வீடு வாடகைக்கு எடுப்பதற்கான Dossier தயாரித்தல்: Garant இல்லாதவர்களுக்கு Visale உதவி

பிரான்சில், குறிப்பாக பாரிஸ் போன்ற பெருநகரங்களில், தகுந்த வாடகை வீட்டைக் கண்டுபிடிப்பது...

பிரான்ஸ் வங்கிகள் கணக்கு தொடங்க மறுத்தல்: Banque de France இன் ‘Droit au Compte’ உரிமை 

பிரான்சில் சட்டபூர்வமாக வாழும் ஒவ்வொரு நபருக்கும் அன்றாட நிதிச் செயல்பாடுகளை மேற்கொள்வதற்கு...
spot_imgspot_img

கனடாவில் இருந்து விடுமுறைக்காக யாழ்ப்பாணம் வந்திருந்த பெண்ணொருவர் வீதி விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். 

கனடாவில் வசித்து வரும் இராஜரட்ணம் சுமதி (வயது 59) எனும் பெண்ணே உயிரிழந்துள்ளார். 
குறித்த பெண் கனடாவில் இருந்து விடுமுறைக்காக யாழ்ப்பாணம் வந்து கொடிகாமம் பகுதியில் தங்கியிருந்த நிலையில் , துவிச்சக்கர வண்டியில் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த வேளை டிப்பர் வாகனம் மோதி விபத்துக்குள்ளானார். 
விபத்தில் படுகாயமடைந்த பெண்ணை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக  யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் , சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் கொடிகாம பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

கருத்து- கனடா வீதி பயணங்கள் எதிர்பக்கமாக இருப்பவை. தவிர வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு யாழ் வீதிகள் மிகவும் சோதனைகுரிய ஒன்றாகவே இருக்கும் காரணம்,ஊரில் இருப்பவர்களே தினமும் மயிரிழையில் வாகனம் செலுத்தியே வாழ்க்கையை ஓட்டி கொண்டுள்ளனர். கனடாவில் இருந்து வருபவர்கள் அதுவும் பிரதான வீதிகளில் சைக்கிள் ஓட்டி போவது என்பது தேவையில்லாத ஒன்று! உயிரை பணயம் வைக்கும் அளவுக்கு காசு மிச்சம் பிடிக்கிற வேலைக்கு போவது நல்லதல்ல.

நிலைமை , சூழ்நிலைகள் எப்படி இருக்கின்றதோ அதற்கு தகுந்த முறையில் நாம் நம்மை மாற்றி கொள்ள வேண்டும். அப்போதுதான் தப்பி வாழ முடியும் தினமும் வீதி விபத்துக்களும் பேராசை கொண்ட டிப்பர்களும் நிறைந்த வீதி ஒன்றில் கனடாவில் இருந்து வந்து 59 வயதில் சைக்கிளில் போக வேண்டும் என நினைத்தது ஆபத்து.. ஒன்று நடந்து செல்லுங்கள்.. இல்லையேல் ஆட்டோ,கார் என பிடித்து செல்லுங்கள்.

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here