Homeதத்துவம்பிரபஞ்ச பேருணர்வும் மனித உள்ளுணர்வும்... Part I

பிரபஞ்ச பேருணர்வும் மனித உள்ளுணர்வும்… Part I

Date:

Related stories

பிரான்சில் அவசர கால அழைப்பு எண்கள், இலவசச் சட்ட ஆலோசனை மையங்கள் (Point Justice)

பிரான்சில் வாழும் போது எதிர்பாராத மருத்துவ அவசர நிலைகள், பாதுகாப்பு அச்சுறுத்தல்கள்...

பிரான்சில் வாழும் முதியவர்கள், நோயாளிகளுக்கு அரச உதவிகள், பராமரிப்புச் சேவைகள் 

பிரான்சில் வாழும் முதியவர்கள் மற்றும் பராமரிப்புத் தேவைப்படும் நோயாளிகளின் சுதந்திரமான வாழ்வை...

பிரெஞ்சு குடியுரிமை நேர்காணல்: முக்கிய கேள்விகள், பிரான்ஸ் வரலாறு / கலாச்சாரத் தயாரிப்புகள்

பிரான்சில் சட்டபூர்வமாகத் தங்கியிருந்து பிரெஞ்சு குடியுரிமைக்கு (Naturalisation) விண்ணப்பிப்பவர்களுக்கு இறுதி மற்றும்...

பிரான்சில் வீடு வாடகைக்கு எடுப்பதற்கான Dossier தயாரித்தல்: Garant இல்லாதவர்களுக்கு Visale உதவி

பிரான்சில், குறிப்பாக பாரிஸ் போன்ற பெருநகரங்களில், தகுந்த வாடகை வீட்டைக் கண்டுபிடிப்பது...

பிரான்ஸ் வங்கிகள் கணக்கு தொடங்க மறுத்தல்: Banque de France இன் ‘Droit au Compte’ உரிமை 

பிரான்சில் சட்டபூர்வமாக வாழும் ஒவ்வொரு நபருக்கும் அன்றாட நிதிச் செயல்பாடுகளை மேற்கொள்வதற்கு...
spot_imgspot_img

உலகில் ஒவ்வொரு புதிய ஒரு குழந்தை பிறந்து வளரும் போதும் நாம் அதை உற்று கவனித்தால் அதன் மூலம் ஒவ்வொரு முறையும் மனிதஇனம் பிறந்து தோன்றிய வரலாற்றை அறிந்து கொள்ள முடியும்,குழந்தை என்றால் அது ஒரு மனித உடலையும்,ஒரு உயிர் என்று அழைக்கப்படும். உள்ளுணர்வையும் கொண்டிருக்கும்,அந்த உள்ளுணர்வு பிறந்தற்கான நோக்கத்தை அடைய அந்த உள்ளுணர்வும் இந்த மனித உடலும் சேர்ந்து வேலை செய்யவேண்டிய தேவை ஏற்படுகின்ற போது இவற்றுக்கு தற்காலிக இணைப்பு பாலமாக மனம் என்ற ஒன்று உருவாகின்றது.

அண்டத்தில் இருக்கும் பேருணர்வு என்பது ஒரு நாளும் அளவில் தங்கியிருப்பதும் இல்லை அழிவதும் இல்லை.ஒவ்வொரு தனித்தனி உடல்களை எடுத்துகொண்டு மனங்களை உருவாக்கி அதனூடாக அது தன்னை தானே அனுபவித்துகொண்டிருக்கின்றது,இதுவே பிரபஞ்ச இயங்கியல் ஆகும்.

ஐம்பூதங்களினால் ஆன இந்த உலகம் என்று அறியப்படுவது அண்டத்தின் ஒரு பகுதியே ஆகும்.மனித உடலின் பருப்பொருட்களும் இதே ஐம்பூதங்களினாலே ஆனது.அண்டத்தில் வியாப்பித்திருக்கும் பேருணர்வே எல்லாவற்றையும் படைத்து நாம் பார்க்கும்,பார்க்கமுடியாத எல்லாவற்றுக்குள்ளும் உள்ளும் வெளியும் நிறைந்திருக்கின்றது.இங்கு பொருட்கள் இயங்கவில்லை.

அந்த பேருணர்வே இயங்கியவாறு உள்ளது,அதனை சார்ந்து அனைத்தும் ஒரே இயக்கத்தில் தங்களை நிலை நிறுத்தி கொள்ள ஒவ்வொரு கணமும் முயற்சிகின்றன.எனினும் இயக்கத்தினால் உருவாகிய மனித உடலினால் உணரப்படும் காலத்தின் நெடிய பாதையில் கூட்டு பொருட்களினால் ஆனவை அனைத்தும் அழிவை சந்தித்து கொள்கின்றன.பேருணர்வை காலத்தை தாண்டி வாழ்வதால்தான் நாம் மரணத்தை காலமாகின்றது என்று குறிக்கும் பழக்கம் வந்திருக்கவேண்டும்.

பேருணர்வு தன்னை சுற்றி ஒரு ஐம்பூத படையை உருவாக்கி கொள்கின்றது. உலகம் ஒரு ஐம்பூத படையிலா சுற்றப்பட்டுள்ள பேருணர்வு,உடல்கள் அதே ஐம்பூத படையலால் சுற்றப்பட்டுள்ள பேருணர்வு,இங்கு எல்லாம் ஒன்றுதான்,அழிவில்லாத உணர்வும் அழியும் உடலும் இணைந்து பணியாற்ற வேண்டிய காலத்தில் உருவாகும் மனித மனம் இரண்டுக்கும் இடையில் இருந்து பணியாற்றுவதால்,அது இரண்டின் பாதிப்புக்கும் உள்ளாகின்றது.பகலில் அது உடலினால் அதிகமாக பாதிக்கப்படுவதால் அது தன்னை உடலின் ஒரு பாகமாக நினைத்து கொள்கின்றது.

இரவில் பேருணர்விலால் பாதிக்கப்படுவதால் அது தன்னை பேருணர்வின் ஒரு பாலமாக நினைத்து கொள்கின்றது.ஐம்புலன்கள் வழியாக உணரப்படுவதும் பேருணர்வின் ஒரு பகுதியே,ஆனால் அவை வேறு வேறு உடல்களினால் பாதிக்கப்பட்டு வெவ்வேறு நிலைகளில் வந்தவை.மனித உடலினுள் இருக்கும் உணர்வினால் கவரப்பட்டு அவை எமது உடலின் ஐம்புலன்களினூடு எடுக்கப்பட்டு மனம் என்னும் இணைப்பு பாலத்தை தாண்டி இரவில் நமது உணர்வை சென்று அடைந்துகொள்கின்றது.நாம் உடல் ஐம்புலங்களினால் உணரும் எல்லாம் அவற்றினால் பாதிக்கப்பட்டவைதான்.

ஐம்பூதங்களை படைத்த பேருணர்வுக்கும் ஐம்பூதங்களினால் ஆன உடலுக்கு இணைப்பு பாலமான மனம் பகலில் தனக்கு தேவையான அனைத்தையும் உடலினை கொண்டு படைத்து ருசித்து கொள்கின்றது.இரவானது பேருணர்வில் வந்து தானாக சரணடைந்து கொள்கிறது.மனிதன் பிறந்து இறக்கும் வரை மனிதன் தன் கிட்டதட்ட அரைப்பகுதி வாழ்வை தூக்கத்தில் கழிக்கின்றான்.

தூக்கம் என்பது பகல் முழுதும் உடலுக்காக இயங்கும் மனம்,இரவில் உடலை தூங்க வைத்துவிட்டு உள்ளுணர்வுடன் தொடர்புகொண்டு அங்கு வாழுகின்றது. ஐம்புலன்களின் மூலம் மனித மனதுக்கு தெரியாமல் எடுத்த பேரண்டத்திற்காக எடுக்கப்பட்ட அத்தனை தகவல்களையும் கடத்திவிடுகின்றது.அதை பெற்று கொள்ளும் பேரண்டம் தனிதனி நபருக்காக பிரபஞ்சத்தை ஒழுங்குபடுத்துகின்றது.

நாம் நம்மை உடல் என்று நினைத்து வாழ்வை வாழ தேவையானதை எல்லாம் எமக்கு உருவாக்கி தருவதும் இதே உணர்வுதான்,இறந்து போகும் வரை எமக்குள் இருக்கும் உள்ளுணர்வு இதே ஐம்புலங்களை கொண்ட உடலை எமக்கே தெரியாமல் எமக்குள் இன்னொரு வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கும்..இங்கு எதுவும் ஆக்கப்படுவதில்லை,அழிக்கப்படுவதுமில்லை… அப்படியேதான் இருக்கின்றது…

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here